திருப்பூர் அமிர்தா வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியின் 26ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில் சுவாமினி நிரஞ்சனா அமிர்தா பிராணா, பள்ளி முதல்வர் சித்ரா, திருப்பூர் கே.வி.ஆர் நகர் காவல் உதவி ஆணையர் ராஜாசுந்தர், மங்கலம் காவல் ஆய்வாளர் சசிகலா.

100மீ, 200மீ, 400மீ ஓட்டப் போட்டிகளும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகளும் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழக சிங்கப்பெண் படையைச் சேர்ந்த வாசுகி பரிசினை வழங்கினார். பள்ளி அளவிலான அணி பிரிவில் அனந்தமயி அணி வெற்றி பெற்றது.
Previous
