கோடை வெயில் தாக்கத்தால், கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் சுற்றி திரிவது அதிகரித்துள்ளது.
வெள்ளியங்கிரி அடிவாரத்தில் உள்ள பூண்டி கோவிலில் பக்தர்களுக்கு வழங்க அன்னதான கூடத்தில் வைத்து இருந்த உணவுப் பொருள்கள், அப்பகுதியில் இருந்த கடைகளில் உணவு பொருட்களை தின்று சேதத்தை ஏற்படுத்தி வந்தது. இதனால் நரசிம்மன், சின்னத்தம்பி என்ற இரண்டு கும்கி யானைகள் அங்கு வரும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட அழைத்து வரப்பட்டுள்ளது.
இதனையடுத்து துடியலூர் அடுத்த பன்னிமடை அருகே பொன்னூத்தம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் தற்பொழுது ஒற்றைக் காட்டு யானை உலா வர துவங்கி உள்ளது. இதை பக்தர் ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.
இதனால், பொன்னூத்து அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துடன் சென்று வர வேண்டும் என வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.