கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான ஐந்து நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

கல்லூரியின் மைக்ரோபயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி துறையினர் முல்லை அகாடமியா இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய பயிற்சியைக் கல்லூரி முதல்வர் சித்ரா  தொடங்கி வைத்தார்.

மாணவர்களின் மனதில் அறிவியல் சிந்தனைகளை விதைக்கவும் புதுமைக் கண்டுபிடிப்புகளை நோக்கி வழிநடத்தவும் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சியில் மைக்ரோபயாலஜி மற்றும் பயோ கெமிஸ்ட்ரி துறைகளில் ஆய்வு, கண்டுபிடிப்புகள் பற்றி மாணவர்களுக்கு செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மனித உடலமைப்பு, டிஎன்ஏ மூலக்கூறுகளை இனம்காணுதல், நோய்க்காரணிகளைக் கண்டறிதல், புரத அமைப்புக் குறித்து ஆராய்தல் போன்றவற்றோடு இன்குபேட்டர்கள், ஈசிஜி உபகரணங்களைக் கையாள்வது பற்றி விளக்கப்பட்டது.