டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 27வது ஆண்டு விழா நடைபெற்றது.

இதில் தலைமை விருந்தினராக பங்கேற்ற பெங்களூரு இன்ஃபோசிஸ் சைபர் பாதுகாப்பு திட்டத்தின் தலைவர் கமலேஷ் சிங் பேசுகையில்: தொழில்துறைகளின் தேவை தினந்தோறும் மாறிக் கொண்டிருக்கின்றன. அந்த மாற்றங்களை புரிந்து கொண்டு மாணவர்கள் தங்களை தக்கவாறு தயார் செய்து கொள்ள வேண்டும். வாய்ப்புகள் எங்கு வேண்டுமானாலும் இருக்கக்கூடும்.அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும் என பேசினார்.

கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்ட பெங்களூர், பிரிட்டிஷ் டெலிகாம் இந்தியா பிரைவேட் லிமிடெட் தொழில்நுட்ப திட்டம் & விநியோக மேலாளர் அசோக் ராஜமாணிக்கம் பேசுகையில்:  அடிப்படை அறிவை உறுதியானதாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். மாணவர்கள் கேள்விகளை துணிச்சலுடன் கேட்க வேண்டும். அறிவைப் பெருக்கும் செயல்முறையில் கேள்விகள் முக்கிய பங்காற்றுகின்றன என பேசினார்.

நான்காமாண்டு மாணவர் சுந்தரேஸ்வரா அருட்செல்வர் விருது பெற்றார். ஒவ்வொரு துறையிலும் 9 இளங்கலை மாணவ மாணவியர்களுக்கு பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடண்ட் விருது வழங்கப்பட்டது.

விழாவில், என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி, இணை செயலாளர் சுப்ரமணியன், கல்லூரி முதல்வர் கோவிந்தசாமி கலந்து கொண்டனர்.