கோவை அம்ருதா வேளாண் அறிவியல் பள்ளி, இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து, காலநிலைக்கு ஏற்ற நெல் சாகுபடி குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை நடத்தியது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். ஸ்வாமி தபஸ்யாம்ருதானந்தபுரி நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
கேரள வன ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த கண்ணன் வாரியர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் டீன் மரகதம், அம்ருதா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுதீஷ் மணலில், டெக்சாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணா ஜெகதீஷ் ஆகியோர் பேசினர்.
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கவும், சந்தை அணுகலை மேம்படுத்தவும், இடைத்தரகர்களை நம்பியிருப்பதைக் குறைக்கவும் அதிக விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசரத் தேவையை நிபுணர்கள் வலியுறுத்தினர். மண் ஆரோக்கியத்தையும் வருமானத்தையும் மேம்படுத்துவதற்காக பயறு வகைகள், சன் ஹெம்ப் ஆகியவற்றின் பருவகால சாகுபடி குறித்து பேசப்பட்டது.

மன அழுத்தத்தைக் குறைக்கும் அரிசி வகைகள், மன அழுத்தத்தை முன்கூட்டியே கண்டறிவதற்கு செயற்கைக்கோள் இமேஜிங் பயன்பாடு குறித்து பேசப்பட்டது.
