வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கால் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல வருடங்களாக துர்நாற்றம், நிலத்தடி நீர் மாசு, திடீர் தீ விபத்து சம்பவங்களால் ஏற்படும் மூச்சு திணறல் போன்ற பல்வேறு பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், குப்பைக்கிடங்கு பகுதிக்கு அருகே உள்ள ஸ்ரீராம் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இதற்கு நீர் பாய்ச்ச கிணறு ஒன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. குப்பை கிடங்கில் உள்ள கழிவுகளில் இருந்து வெளியேறும் மாசுபடிந்த நீர், மேலும் மழையால் வெளியேறும் மாசுபடிந்த நீர் மண்ணுக்குள் சென்று நிலத்தடி நீருடன் கலந்துள்ளதால் இந்த கிணற்றில் அவ்வப்போது நீர் நிறத்தில் காணப்படும்.

இன்றும் இதேபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆனால் இதற்கு முன்பு இருந்ததை விட இம்முறை நீர் கடுமையாக மாசடைந்து வந்துள்ளது. இந்த நீரை தென்னத்தோப்பிற்கு பயன்படுத்துவதால் மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது, இதன் விளைவாக காய்கள் கருப்பு நிறமாக மாறி உள்ளன என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.

ஏற்கனவே இங்கு கிடைக்கும் நீரை வீட்டில் மேற்கொள்ளப்டும் தூய்மை பணிகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே இருந்து தான் தண்ணீரை பெறுகின்றனர். இப்போது இதுபோன்ற நிலையால் தோப்புக்கள் வைத்துள்ள ஒரு சிலரும் அதை முறையாக நடத்தமுடியாத நிலை உருவாகி உள்ளது.

வெள்ளலூர் பகுதி மக்களின் பல ஆண்டு எதிர்பார்ப்பு இந்த குப்பை கிடங்கு நிரந்தரமாக அப்புறப்படுத்தப்படவேண்டும் என்பது தான். இதை புதிதாக அமைந்துள்ள அரசு நிறைவேற்றி தருமா என்ற எதிர்பார்ப்பு கோவை மக்கள் அனைவரிடமும் உள்ளது.
YELLOWAT scaled WATYEL scaled WATEBL scaled