கோவை, அஜ்ஜனூரில் உள்ள பாரதிய வித்யா பவன் பப்ளிக் பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக லெப்டினன்ட் ஜெனரல் முரளி மோகன் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பள்ளி முதல்வர் வித்யாசங்கர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
