பல் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புதுமைத் துறையில் சிறப்பான பங்களிப்புக்காக, ஸ்ரீ ராமகிருஷ்ணா டென்டல் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு “நம்பிக்கைக்குரிய நிறுவனம்” என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருது, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சி தின விழாவில் வழங்கப்பட்டது.

விழாவில் மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற கல்வி நிறுவனங்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

விழாவை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நாராயணசாமி தலைமையிலிருந்து, கல்வி மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சிக்காக அனைத்து நிறுவனங்களும் எடுத்துள்ள முயற்சிகளை பாராட்டினார்.

கல்லூரியின் முதல்வர் டாக்டர் தீபனந்தன், இந்த அங்கீகாரத்திற்கு பல்கலைக்கழகத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றியை தெரிவித்தார். மேலும், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்தார்.