பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் விளையாட்டு தின விழா நடைபெற்றது.

தலைமை விருந்தினராகப் பயனீர் டிரஸ்ட் கருவூலம் நிர்வாகம் அப்ராணா ராஜ்குமார் பங்கேற்று பேசுகையில், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையில், விளையாட்டுகள் உடல்நலம் மட்டுமின்றி உணர்வுசார் சமநிலையையும் வழங்குவதாகவும், பல நோய்களையும் தடுக்கும் சக்தி வாய்ந்த வழிமுறையாகவும் இருப்பதைக் கூறினார்.

விளையாட்டு கடின சூழ்நிலைகளிலும் நிலைத்திருக்கும் சக்தியை வழங்குகிறது. நாம் அனைவரும் வாழ்க்கை எனும் மிகப்பெரிய விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறோம். நம்மால் எடுத்த முயற்சியின் பயனை நம்புங்கள். தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள் எனப் பேசினார்.

எம்.சி.இ.டி கல்லூரியின் 4ம் ஆண்டு மாணவர்கள் அபிசேக், முகேஷ் மற்றும் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்கள் ஸ்ரீ ஹரி, கவின் குமார் விளையாட்டுக்கான பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்போர்ட்ஸ் பெர்சன் விருது பெற்றனர்.

விழாவில், என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி, எம்.சி.இ.டி முதல்வர் கோவிந்தசாமி,நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் அசோக், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.