சர்வதேச செவிலியர்கள் தினம் வரும் மே 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. மே 6 முதல் 12ம் தேதி வரை சர்வதேச செவிலியர்கள் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் நடைபயண நிகழ்வு நடைபெற்றது.
ரேஸ் கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதியில் நடைபெற்ற நிகழ்வை மாவட்ட கலெக்டர் பவன்குமார், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமார், மருத்துவமனையின் தலைமை செவிலியர் துறை அதிகாரி கிரிஜா, தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார், மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன், மருத்துவமனையின் செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் பேசுகையில்: மருத்துவர்கள், மருத்துவமனைகளுக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் செவிலியர்கள் மிகப்பெரிய ஆதரவு அமைப்பாகச் செயல்படுகிறார்கள்.
செவிலியர்கள் நோயாளிகளிடம் காட்டும் அர்ப்பணிப்பு, பாசத்தை இந்த நாளில் பாராட்ட வேண்டும். அவர்கள் செய்யும் விலைமதிப்பற்ற சேவைகளை அங்கீகரிக்க வேண்டும் என கூறினார்.