பராமரிப்பு பணிகளின் காரணமாக கோவையில் நாளை (மே 8) குறிப்பிட்ட இடங்களில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் அதற்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
அதன்படி பீளமேடு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆவாரம்பாளையம், நவ இந்தியா, கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, அத்திபாளையம் பிரிவு, ஷாபா நகர், கிருஷ்ணராஜபுரம், ராமகிருஷ்ணாபுரம், கணேஷ் நகர், போலீஸ் குடியிருப்பு,
பி.எஸ்.ஜி.எஸ்டேட், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, பீளமேடு புதுார், காமதேனு நகர், நேரு வீதி, அண்ணா நகர், வி.ஜி.ராவ் நகர், ஆறுமுகம் லே – அவுட், இந்திரா நகர், கோபால் நகர், தாமு நகர், எல்லை தோட்டம், வ.உ.சி., காலனி, பி.கே.டி.நகர்,
புலியகுளம், அம்மன் குளம், அகிலாண்டேஸ்வரி நகர், பாரதி புரம், பங்கஜா மில், பாலகுரு கார்டன், பாலசுப்ரமணியா நகர், சவுரிபாளையம், கிருஷ்ணா காலனி, மீனா எஸ்டேட், ராஜாஜி நகர், ராஜிவ் காந்தி நகர்,
ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் ரோடு, திருச்சி ரோடு ஒருபகுதி, பார்சன் அபார்ட்மென்ட்ஸ், உடையாம்பாளையம், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, திருவள்ளுவர் நகர் ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும்.