கேரள மாநிலம் அமிர்தபுரி ஆசிரமத்தில் நடைபெற்ற விழாவில், விவேகானந்தா சர்வதேச உறவுகள் நிறுவனத்தால் ‘விவேகானந்தா சர்வதேச அமைதிக்கான விருது’ மாதா அமிர்தானந்தமயி தேவிக்கு வழங்கப்பட்டது. உலகளாவிய அளவில் அவர் செய்து வரும் சமூக நலத்திட்டங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டது.

விவேகானந்தா அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் ககன் மல்ஹோத்ரா, தலைமை ஆதரவாளர் ரவிகுமார் ஐயர் ஆகியோர் இந்த விருதை வழங்கினர்.

தர்பான் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி சாரிகா பன்ஹால்கர், ஸ்வநாத் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஸ்ரேயா பாரதியா, சக்ரா அறக்கட்டளையின் தலைவர் ராஜசேகரன் விழாவில் பேசினர்.