கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலையில் தற்போது மாநகரில் பெருமளவு வெயில் இல்லாத இயல்பான வானிலை சூழல் நிலவுகிறது.
இதன் பின்னர் மழைக்கு வாய்ப்புள்ளதா என வானிலை ஆய்வாளர் சுஜயிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
கோவை மாநகரில் வெள்ளிக்கிழமை வரை பெரிதாக மழைக்கு வாய்ப்பில்லை. தென் மேற்கு பகுதியில் இருந்து காற்று வீச்சு இருப்பதால் இப்படி ஒரு சூழ்நிலை நிலவுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும்.
அதுவே வார இறுதி நாட்களிலும், ஞாயிறு அன்றும் காற்று குறையும் என எதிர்பார்க்கப்படுவதால் மாநகரில் அப்போது ஆங்காங்கே மழையை எதிர்பார்க்கலாம். மழை பெரும்பாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இருக்கும்.
வெப்பம் 34-35° செல்ஸியஸ் வரை இருக்கும். இரவு நேரங்கள் சௌகரியமான வானிலை நிலவும்.

