தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் விருது பெற்ற சட்டக்கதிர் மாத இதழின் ஆசிரியர், வழக்கறிஞர் வி.ஆர்.எஸ். சம்பத்திற்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.

இந்த விழா சென்னை மாநிலக் கல்லூரியின் முன்னாள் மாணவர் மன்றத்தின் சார்பில், பிப்ரவரி 12, 2025 (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு, மாநிலக் கல்லூரி திருவள்ளுவர் அரங்கில் நடைபெற உள்ளது.

மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவைத் தலைவர் ரூஸ்வெல்ட் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், மாநிலக் கல்லூரி முதல்வரும், கல்லூரிக் கல்வி இயக்குநருமான இராமன் தலைமை உரை ஆற்ற உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நக்கீரன் சிறப்புரை வழங்க உள்ளார். மேலும், முன்னாள் நீதிபதி விமலா, பிஜிபி நிறுவனங்கள் மற்றும் லீ மெரீடியன் ஹோட்டல் தலைவர் பழனி ஜி. பெரியசாமி, தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் மற்றும் முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

முன்னாள் மாணவர் பேரவை துணைத்தலைவர் இராஜராஜன் வரவேற்புரையும்,பொதுச்செயலாளர்  இளங்கோவன் நன்றி உரை வழங்குகிறார். பல்வேறு நீதியரசர்கள், முன்னாள் மாணவர்கள், சட்டத்துறை நிபுணர்கள், மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெறவுள்ளது.