டாக்டர் என்.ஜி.பி கல்வி நிறுவன வளாகத்தில் என்.சி.சி வருடாந்திர பயிற்சி முகாம், கடந்த மே 25ம் தேதி தொடங்கியது. ஜூன் 3 வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது.

இந்த முகாமிற்கு 2 (டிஎன்) சிடிசி என்.சி.சி-யின் கட்டளை அதிகாரியான கர்னல் மோஹித் ராவ் சௌஹான் தலைமை தாங்கினார். பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 495 என்.சி.சி. மாணவர்கள் முகாமில் பங்கேற்றனர்.

NGP 1 scaled

2 (டிஎன்) சிடிசி என்.சி.சி.,யைச் சேர்ந்த சுபேதார் ஏ.கே. கோஷ் மற்றும் சுபேதார் முகேஷ் குமார் ஆகியோரின் தலைமையில், ராணுவ நிரந்தரப் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பெண் கேடட் பயிற்றுவிப்பாளரால், என்.சி.சி கேடட்களுக்கு அணிவகுப்புப் பயிற்சி, ஆயுதப் பயிற்சி, துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளம் மற்றும் வரைபட வாசிப்பு அமர்வுகள் போன்ற அடிப்படை ராணுவப் பயிற்சிகள் வழங்கப்படும்.

பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 12 இணை என்.சி.சி. அதிகாரிகள், இந்த மாணவர்களுக்குத் தலைமைத்துவத் திறன்கள், ஆளுமை மேம்பாடு மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளில் பயிற்சி அளித்து வருகின்றனர்.