மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மலைப்பாதையில் இன்று இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், மருதமலை கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருவதால் மலை மேல் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் போதிய வாகனங்கள் நிறுத்த வசதி இல்லை.

இன்று செவ்வாய்க்கிழமை அதிக பக்தர்கள் வருவார்கள். நெரிசலை தவிர்க்க இன்று ஒருநாள் மட்டும் மலைப்பாதையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. எனவே, பக்தர்கள் படிக்கட்டு பாதை, கோவில் பஸ் மூலமாக கோவிலுக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.