வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஶ்ரீ ஶ்ரீநிவாஸப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் உற்சவர் ஶ்ரீதேவி பூதேவியுடன் ஷேசவாகனத்தில் எழுந்தருளி பரமபத வாசல் (சொர்க்கவாசல்) வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது.













