கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம், ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

மேலும் அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை அளித்துள்ளது என்றும், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைந்த உடன் மேலும் பல திட்டங்களை தொகுதி மக்களுக்கு பெற்று தருவேன் என்றும் உறுதியளித்தார்.
