தமிழ் வளர்ச்சித் துறை உலகத் தமிழ் சங்கம் குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரி  இணைந்து தமிழ் ஆசிரியர் மற்றும் மாணவர் புத்தாக்க பயிற்சி குமரகுரு கல்லூரி வளாகத்தில் நடத்தியது. இதில் குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், செய்தி துறை அமைச்சர் சாமிநாதன்,  மரபின் மைந்தன் முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் பேசும்போது :-

தமிழ் வளர்ச்சி துறை  சார்பாக பல்வேறு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். தமிழ் மொழி புத்தாக்க பயிற்சி சார்பில் கோவையில் உள்ள குமரகுரு கல்லூரியில் ஒத்துழைப்போடு தமிழ் ஆசிரியர் மற்றும்  மாணவர் செல்வங்களுக்காக இந்த  நிகழ்ச்சியை துவக்கி உள்ளோம்.

1 20

பிறமொழிகள் ஆதிக்கம் காரணமாக தாய்மொழி மெல்ல, மெல்ல தமிழர்களிடைய இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதனை தடுக்கின்ற வகையில் இந்த மொழிக்கு  புத்தாக்க பயிற்சி  உருவாக்கி மாணவர் செல்வங்களுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.தொடர்ந்து இந்த பயிற்சி  பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும். தமிழ் வளர்ச்சி துறையில்  இளங்கலை தமிழ், இலக்கியம் பெற்றவர்களுக்கு   முதல் தமிழ்நாடு அரசு பணியாளர்  தேர்வாணையம்  உதவி இயக்குனர் பணியிடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றார்.

தமிழ்நாடு முழுவதும் பலகையில் தமிழ் மொழி பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு வரவேண்டும் விரைவில் தமிழ் மொழி உரிய அங்கீகாரம் பெற்று பெயர் பலகை இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் என தெரிவித்தார்.