கோவை டவுன்டவுன் ரோட்டரி கிளப் சார்பில் ரோட்டோ ரைடு ஆர் ரன் 2025 எனும் தலைப்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு செயற்கை கால் பொருத்த நிதி திரட்டும் விழிப்புணர்வு மரத்தான் நடந்தது.

இதில் கிடைக்கும் நிதிகளை திரட்டி 8 முதல் 14 வயதுக்குட்பட்ட மற்றும் பிற சிறப்பு குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினர்களாக  தமிழ்நாடு கட்டுப்பாட்டு அறை ஐ.ஜி., பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.  கௌரவ விருந்தினராக தலைமை வனக்காப்பாளர் டாக்டர் செந்தில்குமார், காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் ஏ.டி.எஸ்.பி., செட்ரிக் பங்கேற்றனர்.

ரோட்டோ ரைடு ஆர் ரன் 2025 திட்டத்தின் தலைவர் லட்சுமி நாராயணன், திட்டத்தின் நோக்கம் குறித்து கூறுகையில், கோவைக்கு அருகில் உள்ள ஏழை எளிய, 8 முதல் 14 வயது உள்ள சிறப்பு குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்க உதவி பெறும் வகையில் இந்நிகழ்வு அமைகிறது. இதில் கால் வளைந்த குழந்தைகள், மரபணு குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள், எழுந்து நடமாட முடியாத குழந்தைகளுக்கு ஆதரவளிகப்படுகிறது.” என்றார்.