கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையும் தமிழக பத்திரிகையாளர்கள் சங்கமும் இணைந்து இலவச மருத்துவ ஆலோசனை முகாமை ஊட்டி ஏடிசி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்தியது.
இதில்,கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி சிவகுமாரன், உதகை வருவாய் கோட்டாட்சியர் சதிஷ் மற்றும் உதகை காவல் துணை கண்காணிப்பாளர் நவீன்குமார் ஆகியோர் தொடக்கி வைத்தார்.
முகாமில் இருதய மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மாற்று மருத்துவம், புற்றுநோய் மருத்துவம், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், பொதுநல மருத்துவம் ஆகியவற்றுக்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், எலும்பு அடர்த்தி, கர்பப்பை வாய் ஆகியவற்றுக்கு இலவச பரிசோதனைகள் செய்யப்பட்டது. இம்முகாமில் ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.