கோவை மாநகர காவல் துறை மற்றும் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில் பொதுமக்கள் சாலையை கடப்பதற்காக மருத்துவமனை முன்பு பெலிகன் சிக்னல் நிறுவப்பட்டது. இதனை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதில் மருத்துவமனை செயல் இயக்குநர் அருண் பழனிசாமி, மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.