கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் 180 மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் ஜூலை 5 அன்று கோவை ஈஷா யோக மையத்திற்கு கல்வி மற்றும் அனுபவப் பயணமாக வருகை தந்தனர்.
மாணவிகள் ஆதியோகி, தியானலிங்கம், லிங்கபைரவி உள்ளிட்ட ஈஷா வளாகத்தின் முக்கிய ஆன்மிகத் தலங்களை பார்வையிட்டு, அவற்றின் சிறப்புகள், யோக அறிவியல், இந்திய பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் மனித நல்வாழ்வுக்கான ஈஷாவின் பல்வேறு முயற்சிகள் குறித்து அறிந்து கொண்டனர்.
மேலும், இயற்கைச் சூழலுடன் இணைந்த அமைதியான வளாகத்தை சுற்றிப்பார்த்த மாணவிகள், மனஅமைதி, ஒழுக்கம், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் யோகத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வைப் பெற்றனர்.
