ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசுகையில்: பட்டதாரி மாணவர்களை வெறும் அறிவு ஈட்டலுக்கு அப்பால், அதன் பயனுள்ள பயன்பாட்டிற்கு முன்னேறுமாறு வலியுறுத்தினார். வெற்றி மற்றும் புதுமைக்கு பெற்ற அறிவினைப் பயன்படுத்துவது அவசியம். நன்றியுணர்வு மற்றும் குடும்பத்தின் மதிப்புகளை நினைவூட்டி, முழுமையான வெற்றியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

சிறப்பு விருந்தினராக வி.எல்.எஸ்.ஐ சொசைட்டி ஆஃப் இந்தியாவின் தலைவர் சத்ய குப்தா கலந்துகொண்டு பேசுகையில்: இன்று பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் சர்வதேச பிராண்டுகளாக இருந்தாலும், வலுவான இந்திய தயாரிப்பு சூழலமைப்பை உருவாக்கும் அவசரத் தேவையை எடுத்துரைத்தார்.

2047 ஆம் ஆண்டிற்குள் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் இந்தியா ஒரு சிறந்த நாடாக காட்சியளிக்கும். இந்த இலக்கை அடைவதற்கு உள்நாட்டு தயாரிப்புகள் மற்றும் இறையாண்மை கொண்ட தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது அவசியம் என்றார்.