பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. இங்கு புலி, மான், வரையாடு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

தற்போது ஆழியார் – வால்பாறை சாலையில் சுற்றுலா பயணிகள் தொடர் விடுமுறை காரணமாக முகாமிட்டு வருகின்றனர்.  கடந்த சில நாட்களாக ஆழியார் – வால்பாறை வழிப்பாதையில் யானை தாக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

ஆழியார் பகுதியில் உலா வரும்  யானை கூட்டத்தை சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கண்டு ரசித்து புகைப்படங்களை எடுத்து வருகின்றனர். யானை கூட்டம் ஆழியார் பகுதியில் உலா வருவதால் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறியுறுத்தியுள்ளனர்.

வனவிலங்குகளை கண்டால் புகைப்படம் எடுக்கவோ, செல்பி எடுக்கவோ, உணவு பொருட்களை வழங்கவோ, வனவிலங்குகளை கண்டால் சாலையில் வாகனங்களை நிறுத்தவோ கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.