கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.74க்குட்பட்ட சீரநாயக்கன்பாளையம், கோகுலம் காலனி பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதில், மண்டலத் தலைவர் தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையர் துரைமுருகன், உதவி செயற்பொறியாளர் சவிதா, மாமன்ற உறுப்பினர் சங்கர், உதவி நகர திட்டமிடுநர் மகேந்திரன், மண்டல சுகாதார அலுவலர் வீரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.