கோவை ஜி.டி நாயுடு மேம்பாலத்தில் ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய 44 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இந்த கேமரா, அதிவேகமாக செல்லும் வாகனங்களை பதிவு செய்யும். சம்பந்தப்பட்டவர்களின் செல்போன்களுக்கு புகைப்படத்துடன் தகவல் அனுப்பும் வகையில் கண்காணிப்பு கேமரா செயல்படும்.
மேலும் அபராதம் விதிக்கப்பட்ட விவரங்கள் இடம்பெறும் வகையில் டிஜிட்டல் டி.வி திரைகளும் 17 இடங்களில் அமையும். அனைத்து பணிகளும் ரூ.3 கோடி செலவில் செய்யப்படும் என்றும், இதற்கான ஒப்பந்த பணிகள் ஒரு சில நாட்களில் முடிவு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும் என மாநில நெடுஞ்சாலைத்துறை கோவை கோட்ட பொறியாளர் தெரிவித்துள்ளார்.
