தனிஷ்க் ஜூவல்லரி சார்பில், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தாஜ் விவான்தா ஹோட்டலில் உயர்ரக வைர நகை கண்காட்சி மற்றும் விற்பனை சனிக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சி வரும் 15ம் தேதி வரை நடைபெறும். இதனை தனிஷ்க் பொது மேலாளர் பாலசுப்பிரமணியம் துவக்கி வைத்தார்.

செய்தியாளர்களிடம் சர்க்கிள் பிசினஸ் மேலாளர் சந்திரசேகர் பேசுகையில்: முதல்முறையாக தனிஷ்க் சார்பில் கோவையில் உயர் மதிப்பு கொண்ட வைர நகைகளின் 3 நாள் கண்காட்சி நடக்கிறது.

திருமண சீசனுக்கு தேவையான அனைத்து வகையான வைர நகைகளும், பெண்கள் தினசரி அணியும் வகையில் உள்ள வைர நகைகளும், கொங்கு மண்டல வாடிக்கையாளர்கள் விரும்பும் வைர பதித்த தாலிக்கொடி, வளையல்கள் ஆரம், நெக்லஸ் என பலவகை கலெக்ஷன்கள் இடம் பெற்றுள்ளன.

TANISHq 1

கண்காட்சியின் போது வாங்கப்படும் வைர நகைகளில் 20% வரைக்கும் தள்ளுபடி பெற முடியும். கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் என தெரிவித்தார்.

தனிஷ்க்கின் கோவை ஏரியா பிஸ்னஸ் மேலாளர்கள் சிவரஞ்சனி, நவீன் குமார் பேசுகையில்: வைர நகை கண்காட்சிக்கு 1000க்கும் அதிகமான டிசைன்கள் வந்துள்ளன.

வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த நகையை அன்றே வாங்கலாம் அல்லது அதன் 50% கட்டணத்தை செலுத்தி நகையை அன்றைய விலைக்கு முன்பதிவு செய்யலாம். மீதம் நகைக்கான கட்டணத்தை பின்னர் வாங்க வரும்போது செலுத்தலாம்.

TANISH 2

தங்களின் பழைய தங்கத்தை வைரமாக மாற்றும் வசதியும் கண்காட்சியில் இடம்பெறும். அதன்படி, தங்கத்தின் மதிப்புக்கு ஏற்ப வைர நகைகளை பெறலாம். நிகழ்வில் பிரத்தியேக வைர நகைகளுக்கான காரட் மீட்டரும் இடம்பெறும். இதில், பழைய வைர நகைகளின் தரத்தை அறிந்துகொள்ளமுடியும் எனத் தெரிவித்தனர்.