தனிஷ்க் ஜூவல்லரி சார்பில், வரும் டிசம்பர் 13 முதல் 15 வரை கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள தாஜ் விவான்தா ஹோட்டலில் உயர் ரக வைர நகை கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறவுள்ளது.
இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு ஒப்பனக்கார வீதி தனிஷ்க் ஷோரூமில் நடைபெற்றது. இதில் நிறுவனத்தின் கோவை ஏரியா பிஸ்னஸ் மேலாளர்கள் சிவரஞ்சனி மற்றும் நவீன் குமார் ஆகியோர் பேசுகையில் கூறியதாவது:-
டிசம்பர் 13 முதல் 15 வரை மூன்று நாட்களுக்கு தாஜ் விவான்தா ஹோட்டலில் உயர் ரக வைர நகை கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் 500க்கும் அதிகமான டிசைன்களில் வைர நகைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இவை அனைத்தும் திருமண சீசனுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டவை.

வாடிக்கையாளர்கள் பயன்பெறும்படி சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான நகையை அன்றே வாங்கலாம் அல்லது அதன் 50% கட்டணத்தை செலுத்தி அந்த நகையை அன்றைய விலைக்கு முன்பதிவு செய்யலாம். மீதம் கட்டணத்தை நகையை வாங்க வரும்போது செலுத்தலாம்.
பழைய தங்கத்தை வைரமாக மாற்றும் வசதியும் கண்காட்சியில் இடம்பெறும். அதன்படி, தங்கத்தின் மதிப்புக்கு ஏற்ப வைர நகைகளை பெற்றுக்கொள்ளலாம்.
நிகழ்வில் தனிஷ்க்கின் பிரத்தியேக வைர நகைகளுக்கான காரட் மீட்டரும் இடம்பெறும். இதில், பழைய வைர நகைகளின் தரத்தை அறிந்துகொள்ளமுடியும். முன்பதிவு செய்துகொண்டு முதல் இரண்டு நாட்கள் நகைகளுடன் ராம்ப் வாக் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருமண நகைகள் வாங்கும் பெண்ககளுக்கு சிறப்பு பிரைடல் போட்டோ சூட் செய்துகொடுக்கப்படும். தனிஷ்க்கில் வாங்கிய பழைய வைர நகைகளையும் கூட அதன் தற்போதை, மதிப்புக்கு ஏற்ப இங்கு மாற்றிக்கொள்ளலாம் என தெரிவித்தனர்.
