தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கம் சார்பில் 5வது ஜூனியர் மற்றும் 10வது சீனியர் மாநில பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி அமிர்தா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு இந்திய பாராலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவர் சந்திரசேகர் மற்றும் கோவை பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் ஷர்மிளா ராம் ஆனந்த் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்தார்.