‌‌ஶ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் 26 ஆவது பட்டமளிப்பு விழா இன்று (27.9.2024) நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் விழாவில் முதல் நாளில் சுந்தரம் கிளேடன் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை தகவல் அதிகாரி சங்கர் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், கல்வியியல் இயக்குநர் என்.ஆர். அலமேலு, கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் என பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், இஇஇ, சிஎஸ்இ, ஐடி, பிஎம்இ, சிவில் ஆகிய துறைகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன. முதல் நாளில் 530 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.