குனியமுத்தூரில் ஸ்போர்ட்ஸ் லேண்ட் 2வது கிளை திறப்பு விழாவில் குத்துவிளக்கு ஏற்றி விற்பனையை துவங்கி வைக்கிறார் நேரு கல்வி குழுமங்களின் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார். உடன்,  ஸ்போர்ட்ஸ் லேண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் நவீன் ஜோன் வில்சன், சஞ்சய் ஜான்சன் உள்ளிட்டோர்.

விளையாட்டு உபகரணங்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஸ்போர்ட்ஸ் லேண்ட், தனது இரண்டாவது கிளையை கோவை குனியமுத்தூர் அன்னபூர்ணா ஹோட்டல் எதிரே தொடங்கியது.

இதற்கான திறப்பு விழா ஸ்போர்ட்ஸ் லேண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் நவீன் ஜோன் வில்சன், சஞ்சய் ஜான்சன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. நிகழ்வில் நேரு கல்வி குழுமங்களின் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார்.

35 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் ஸ்போர்ட்ஸ் லேண்ட், விளையாட்டு உபகரணங்களுக்கான தனித்துவமான வணிக நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. குனியமுத்தூரில் தொடங்கப்பட்டுள்ள புதிய கிளை, நவீன வசதிகளுடன், வாடிக்கையாளர்கள் விளையாட்டு உபகரணங்களை நேரில் தேர்வு செய்யக்கூடிய விசாலமான இடத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, பேஸ்பால், கூடைப்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு சாதனங்களும், பாதுகாப்பு உபகரணங்கள், ஆடைகள், உடற்பயிற்சி சாதனங்கள் மற்றும் டிராபிக்கள் உள்ளிட்ட பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் வழங்கப்படுகின்றன.

புதிய கிளை திறப்பு விழா முன்னிட்டு முதல் ஏழு நாட்கள் சிறப்பு தள்ளுபடி மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக நிர்வாக இயக்குநர் நவீன் தெரிவித்தார்.