கோவை சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் நடத்திய ஸ்லோகன் போட்டியில், மொபைல் போன் வாங்கிய குனியமுத்தூரைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.
கோவை சுந்தராபுரம் பகுதியில் சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் எனும் பிரம்மாண்ட வீட்டு உபயோக பொருட்களுக்கான விற்பனை மையம் கடந்த 9ஆம் தேதி தொடங்கப்பட்டது. 70,000 சதுர அடியில் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் இங்கு வாங்கிக்கொள்ளலாம்.
துவக்க விழாவை முன்னிட்டு மூவாயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்குபவர்களுக்கு ஸ்லோகன் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் பரிசாக கார் மற்றும் ஏராளமான பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஸ்லோகன் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் போட்டியாளர்கள் எழுதிய ஸ்லோகன்களில், சிறந்தது தேர்வு செய்யப்பட்டு, அதில் நாற்பது பேருக்கு சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் வளாகத்தில் பரிசுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஐயாயிரம் மதிப்புள்ள பரிசுகள் தொடங்கி ஐம்பதாயிரம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் முதல் பரிசாக கார் பரிசு வென்றவர் அறிவிக்கப்பட்டார். இதில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அயூப்கான், முனீரா பேகம் என்ற தம்பதியினருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.
குடும்பத்துடன் சாதாரணமாக ஏதாவது பரிசு தமக்குக் கிடைக்கும் என நிகழ்ச்சிக்கு வந்த முனீரா பேகம் கார் பரிசு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதும் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிய மொபைல் போன் ஒன்றை சேரா ஹோம்ஸ் ஜங்ஷனில் வாங்கி, ஸ்லோகன் போட்டியில் கலந்து கொண்டதாகவும், எதிர்பாராமல் கார் பரிசு கிடைத்துள்ளது இன்ப அதிர்ச்சி அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
முதல் பரிசை வென்ற குடும்பத்தினருக்கு கார் சாவியை, சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் நிர்வாக இயக்குனர் ஜோஸ் டைசன் மார்டின் வழங்கினார். நிகழ்ச்சியில் சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் சி.ஓ.ஓ.ஜார்ஜ் மார்ஷல், நிர்வாகிகள் நிர்மல் அபுதாகீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
