கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் புதன்கிழமை திறக்கப்பட்டது. இது கோவையில் திறக்கப்படும் 20வது ஷோரூம் ஆகும்.

புதிய ஷோரூமை திறந்து வைத்து, முதல் விற்பனையை குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் துவக்கி வைத்தார். கோவையைச் சேர்ந்த எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் ஆடைகளை வாங்கி முதல் விற்பனையைப் பெற்றுக்கொண்டார்.

2 4

நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன், நிர்வாக இயக்குனர் அருண் ஈஸ்வர், இணை நிர்வாக இயக்குனர் அஸ்வின், ஹீரோ பேஷன் நிர்வாக இயக்குனர் சுந்தரமூர்த்தி முக்கிய பிரபலங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

புதிதாக கிறக்கப்பட்டுள்ள ஷோரூமில் வெள்ளை வேட்டிகள், சட்டைகள் முதல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பண்டிகை கால ஆடைகள் மற்றும் பல்வேறு வகையிலான புதிய ஆடை ரகங்கள் வரை ஏராளமாக உள்ளன. திறப்பு விழாவில் சுயம்வர கிராண்ட், பரிணயம் கிராண்ட், சங்கல்பம் கிராண்ட் மற்றும் லக்ஸ் செட் ஆகிய கிராண்ட் கலெக்ஷன்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

5 2 scaled

துவக்க விழாவில் கே.ஆர். நாகராஜன் பேசுகையில்: கோவையில் எங்கள் 20வது ஷோரூமைத் திறப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. கோவை எங்களுக்கு எப்போதும் சிறப்பு வாய்ந்த நகரமாகும். மேலும் எங்கள் வாடிக்கையாளர்கள் பல ஆண்டுகளாக எங்களுக்கு அளித்து வரும் ஆதரவிற்கு நாங்கள் உண்மையிலேயே நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம்.

அவர்களின் ஊக்கமே எங்கள் பயணத்தின் அடித்தளமாக இருந்து வருகிறது, மேலும் இந்த புதிய ஷோரூம் எங்களின் பலவித ஆடை ரகங்களை அவர்களுக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான ஒரு வழியாகும்.

3 2 scaled

திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் என அனைத்திற்கும் ஏற்ற ஆடைகள் இங்கு ஏராளமாக உள்ளன பாரம்பரியத்தை போற்றும் வேட்டி-சட்டைகளை பல்வேறு வண்ணங்களில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்தார்.