கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புள்ள ரவுண்டானாவில், மகளிருக்கு சமூகம், பொருளாதாரம், அரசியல் மற்றும் கல்வி போன்ற துறைகளில் சமநிலை மற்றும் சுதந்திரம் வழங்குவதை குறிக்கும் வகையில் அடிசியா டெவலப்பர்ஸ் சார்பில் புதிய சிலை அமைக்கப்பட்டது.இந்த சிலையை இன்று (12.02.2025) நடந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், அடிசியா நிறுவனத்தின் தலைவர் மணிகண்டன் ஆகியோர் திறந்து வைத்தனர்.