கோவை சிட்கோ பகுதியில் செயல்பட்டு வரும் கொசிமா சங்கத்தின் 52 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் தலைவராக மதிவாணன், செயலாளராக குமார், பொருளாளராக சௌந்தர்ராஜ், துணை தலைவர்களாக லோகநாதன், ராஜசேகரன், மல்லிகா தேவி, இணை செயலாளர்களாக சிஜு, நவநீதகிருஷ்ணன், மகேஸ்வரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உடனடி முன்னாள் தலைவர் நடராஜன் மற்றும் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்.

அரசு அதிகாரிகள், கொடிசியா, அகில இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், எல்.யூ.பி, போசியா சங்க நிர்வாகிகள், ஏனைய சங்கங்கள், 3242-C லயன்ஸ் மாவட்ட ஆளுநர், 324 முன்னாள் கூட்டு மாவட்ட தலைவர், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
