மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவை இம்மாதம் இறுதியில் நிறைவடையும் நிலையில், பயணிகளின் வசதிக்காக டிசம்பர் 1ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி ரயில் (06030) ஞாயிறு இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். மறுமர்க்கத்தில் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் (06029) ரயில் திங்கள் இரவு 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

சேரன்மாதேவி, கள்ளிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழ்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லுார், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனுார், கோவை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.