ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் எல்ஜி அல்ட்ரா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதன் மூலம் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் எல்ஜி அல்ட்ரா லிமிடெட் நிறுவனத்தினை பார்வையிடுவது, நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் கல்லூரிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தொழில்நுட்ப கட்டுரைகள் சமர்ப்பிப்பது, மாணவர்களுக்கு ப்ராஜெக்ட் ரிப்போர்ட் குறித்தான ஆலோசனை வழங்குவது, தொழிற்பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அளிப்பது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுகளில் கல்லூரி ஆசிரியர்கள் இந்நிறுவனத்துடன் ஒன்றிணைந்து ஆராய்ச்சி மேற்கொள்வது ஆகியவை அடங்கும்.
எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சுந்தர், எல்ஜி அல்ட்ரா லிமிடெட் நிறுவனத்தின் மனிதவள துறைத்தலைவர் செந்தில்குமார் ராமசாமி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அலுவலர் மோகன்குமார், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் நிரஞ்சனாதேவி ஆகியோர் உடனிருந்தனர்.
