கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் யக்‌ஷா கலைத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், தேசிய விருதைப் பெற்ற இசைக்கலைஞர் ராகுல் தேஷ்பாண்டே வழங்கிய இந்துஸ்தானி இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை மயக்கவைத்தது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல இசையமைப்பாளர் அனிருத், தாயார் லட்சுமி ரவீந்தர் மற்றும் ஈவண்ட் ஆர்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சரஸ்வதி கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர்.

ஈஷா மைய வளாகத்தில் அமைந்துள்ள சூர்ய குண்ட மண்டபம் முன் நடந்த இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், தேசிய விருது பெற்ற பிரபல இந்துஸ்தானி இசைக் கலைஞர் ராகுல் தேஷ்பாண்டே மற்றும் நிகில் ரத்னாகர் பதக், ஆஷிஷ் தத் செளபே, பூர்ணிமா திலிப் செக்டே உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்று அசத்தினர்.

இந்த இசை நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான பொதுமக்களும் ஈஷா தன்னார்வலர்களும் பாராட்டி ரசித்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் யக்‌ஷா திருவிழாவின் நிறைவு நாளான இன்று (பிப்., 25), மீனாட்சி ஸ்ரீனிவாசன் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.