இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் சர்வதேச அளவிலான ஆராய்ச்சி கண்காட்சியில் பதக்கங்கள் வென்றனர்.
மலேசியா மல்டிமீடியா பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அளவிலான ஆராய்ச்சி கண்காட்சி வருடம் தோறும் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டு கண்டுபிடிப்புகளுக்கு விளக்கக்காட்சி தருவார்கள்.
இதில் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவாற்றல் துறை மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு கண்டுபிடிப்புகளை சமர்பித்தனர். துறைத் தலைவர் பேராசிரியர் சசிகலா மற்றும் திலக், தாகா, காவ்யா, காயத்ரி, பஸ்னா, ஷர்மி ஆகியோருடன் இணைந்து கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்தனர். இதில் இவர்கள் மூன்று பதக்கங்கள் வென்றனர்.
இந்துஸ்தான் கல்வி மற்றும் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி கண்ணையன், நிர்வாக செயலர் பிரியா சதிஷ் பிரபு, கல்லூரி முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
