வீடுகள், தொழில்துறை மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான அனைத்து வகை சோலார் கட்டமைப்புகள் குறித்த 2 நாள் கண்காட்சி கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் வியாழக்கிழமை துவங்கியது.

‘இ.கியூ. மேக் ப்ரோ’ மற்றும் ‘சி 2 ஜி’ நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்த ‘குளோபல் சோலார் கண்காட்சி’ மற்றும் கருத்தரங்கு மேற்கு தமிழகத்தின் மிகப்பெரிய சோலார் கண்காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது.

இதில் சோலார் தகடுகள் உற்பத்தியாளர்கள், சோலார் இன்வர்ட்டர் மற்றும் பேட்டரி தயாரிப்பு நிறுவனங்கள் உள்பட ஒட்டுமொத்த சோலார் துறை சார்ந்த நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை காட்சிபடுத்தியுள்ளனர்.

கண்காட்சியை இந்திய சோலார் சங்க தலைவர் நரசிம்மன், நிகழ்ச்சியின் அமைப்பாளர் ஆனந்த் குப்தா மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

75க்கும் அதிகமான நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் தங்கள் தயாரிப்புகளை காட்சிபடுத்தி உள்ளனர். இதில் அதானி சோலார், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஸ்பார்க் நிறுவனம், பானாசோனிக், ஹாவல்ஸ் , பொலிகாப் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களின் ஸ்டால்கள் அமைத்து தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தினர்.