வடகோவையில் உள்ள திமுக அலுவலகத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்த பேராசிரியர் அன்பழகனின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று(7-3-2025)நடைபெற்றது.
இதில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கி திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர், கழக சொத்துப்பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, தலைமைக் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டலத்தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், பகுதி மற்றும் வட்டக்கழகச் செயலாளர்கள், கழகத் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.