கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையக் கட்டுமானப் பணிகளை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

