கோயம்புத்தூர் சின்மயா மிஷன் சார்பில், ‘108 சமஷ்டி ஸ்ரீ ஹனுமன் சாலிஸா ஹோமம்’ என்ற கூட்டு பிரார்த்தனை வடவள்ளியில் உள்ள மருதம் விளையாட்டு அரங்கத்தில் பிப்ரவரி 15, மஹா சிவராத்திரியன்று நடைபெற உள்ளது.
இதில் காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் கலந்து கொள்ளலாம். உடல் நலன், உள்ளத் தூய்மை, உலக நன்மை ஆகிய நோக்கத்திற்காக இந்த ஹோமம் நடத்தப்படுகிறது. இதில் பாராயணம் செய்வது முற்றிலும் இலவசமானது. முன்பதிவு தேவையில்லை.

ஹோமத்தில் பங்குபெற விரும்புபவர்கள் நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ளவும். உங்கள் வசதிக்கேற்ப உங்கள் 45 நிமிடங்களை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
ஹோமத்தில் தனிநபராகவோ அல்லது குழுவாகவோப் பங்குபெற மற்றும் ஹோமத்திற்கான நன்கொடை அளிக்க சின்மயா மிஷன் ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால் – 96552 45870 தொடர்பு கொள்ளவும்.

