கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் மாணிக்கவாசகர் அருளிய ‘திருவாசகம் முற்றோதல் பெருவிழா’ ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

நிகழ்விற்கு ராயல் கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமை தாங்குகிறார். சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் முன்னிலை வகிக்கிறார். சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார் திருக்கூட்ட நிறுவனர் தாமோதரன், சிவத்துறவி ராஜம்மாள் சங்கரன் ஆகியோர் நிகழ்த்துகின்றனர்.

சிரவையாதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், தென்சேரி ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளார், காமாட்சிபுரம் ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் மற்றும் ஆதீனங்கள், மடாதிபதிகள், சாதுக்கள், சன்னியாசிகள், ஓதுவார்கள், அருளாளர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். நீலம்பூர் ராயல்கேர் மருத்துவமனை மற்றும் உயிரின் சுவாசம் அறக்கட்டளை விழா ஏற்பாடுகளை செய்துள்ளது.