கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி, மற்றும் இந்திய மருந்து சங்கம் சார்பில், உலக மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு, கோவை ரேஸ் கோர்ஸில் விழிப்புணர்வு பேரணியை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினர் கலெக்டர் கிராந்தி குமார், மருந்தாளுநர் தின விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.உடன் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி சி. வி. ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி முதல்வரும், ஐ.பி.ஏ., தலைவருமான முனைவர் டி.கே.ரவி, பி.எஸ்.ஜி., மருந்தியல் கல்லுாரி முதல்வரும், கோவை ஐ.பி.ஏ., செயலருமான முனைவர் எம்.ராமநாதன் உள்ளிட்டோர்.மேலும் பேரணியில் 400க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.