கே.பி.ஆர். பெண் பணியாளர்கள் கல்விப் பிரிவின் முதலாம் ஆண்டு துவக்க விழா வியாழக்கிழமை (12.9.2024) கே.பி.ஆர். மில் நிறுவனத்தின் ஒரு அங்கமான குவாண்டம் நீட்ஸ் மூன்றாவது யூனிட்டில் நடைபெற்றது. நிகழ்விற்கு கே.பி.ஆர். குழும தலைவர் கே.பி.ராமசாமி தலைமை தாங்கினார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) பொதுச் செயலாளர் பாரத் லால் மற்றும் டாடா மெடிக்கல் & டயக்னோஸ்டிக்ஸின் (டாடா குழுமம்) நிர்வாக இயக்குநர் கிரீஷ் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.