கே.பி.ஆர். நிறுவனங்கள் சார்பில் 2025 முதல் “கே.பி.ஆர்.லெகஸி விருதுகள்” வழங்கப்படுகிறது. கல்வி, ஆராய்ச்சி, புதுமை படைப்புகள் உருவாக்கம், தலைமை பண்பு, சமுதாயத்திற்கு நற்பணி என பல்வேறு துறைகளில் சாதித்த சிறந்த ஆளுமைகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.


நாடு முழுவதும் 1000.,க்கும் மேற்பட்ட சாதனையாளர்களில் இருந்து 15 பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.


நிகழ்விற்கு கே.பி.ஆர். குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி தலைமை தாங்கினார். குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் பி. கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, விருதுகளையும், பரிசு தொகையையும் வழங்கினார்.
கே.பி.ஆர். கலை அறிவியல் & ஆராய்ச்சி கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு கே.பி.ஆர். நிறுவனங்களின் செயலாளர் காயத்ரி அனந்தகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

அமெட் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி. ராஜேந்திரன் வெங்கடாசலம் அவர்களுக்கு, துறைசார் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய மகத்தான மற்றும் நீடித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் உயரிய ‘ஹால் ஆப் பேஃம் ’ விருது வழங்கப்பட்டது.

2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் இருந்து, பல்வேறு கல்வி மற்றும் தொழில்த் துறைகளைச் சார்ந்த சிறப்பு நடுவர் மன்ற உறுப்பினர்கள் விருதுக்குரியவர்களை மதிப்பீடு செய்து தேர்ந்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(நிகழ்வின் சிறப்பு கட்டுரை இன்னும் சில மணி துளிகளில் புதுப்பிக்கப்படும்…)
