உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆதி மாருதி நிறுவனத்தின் சரவணம்பட்டி, கிணத்துக்கடவு, கோத்தகிரி, ஆலந்துறை மற்றும் தொண்டாமுத்தூர் ஆகிய கிளைகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு வெள்ளிக்கிழமை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

ஆதி மாருதி நிறுவனத்தின் விற்பனைத் துறை துணைத் தலைவர் பெர்னார்ட் நோயல், சரவணம்பட்டி ஆதி மாருதி ஷோரூமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.
