ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் கோயம்புத்தூர் மேலாண்மைச் சங்கம் இணைந்து கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ‘பிரிட்ஜ் மாநாடு 2026 நடத்தியது. வரவேற்புரையை கல்லூரியின் முதல்வர் சௌந்தரராஜன் வழங்கினார்.

தலைமை உரையை எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் ஆற்றினார். எதிர்காலத்திற்குத் தயாரான தொழில் வல்லுநர்களை உருவாக்குவதில் கல்வியின் மாற்றியமைக்கும் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

மேலும், பிராந்திய மற்றும் தேசிய பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறைகளுக்கும் இடையே தொடர்ச்சியான ஒத்துழைப்பு தேவை என்பதையும் வலியுறுத்தினார்.

சிறப்புரையை கோயம்புத்தூர் மேலாண்மைச் சங்கத்தின் தலைவர் நித்யானந்தன் தேவராஜ், தென்னிந்திய தணிக்கையாளர்கள் சங்கத்தின் தலைவர் வெங்கடேஷ், குவாட்ராசிஸ்டம்ஸ் நெட் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநர் பிரசாந்த் சுப்ரமணியன், சக்தி ஃபைனான்ஸ் லிமிடெட்டைச் சேர்ந்த ரவீந்திரன், அமிர்த விஸ்வ வித்யாபீடத்தைச் சேர்ந்த பிரசாந்த் நாயர், சிஎம்ஏ-வின் செயலாளர் மற்றும் வோடஃபோன் ஐடியாவின் முன்னாள் வணிகத் தலைவர் புனீத் கிருஷ்ணன் ஆகியோர் வழங்கி தரமான கல்வி, புத்தாக்கம் மற்றும் உலகளாவிய தரநிலைகள் குறித்த கல்விசார் கண்ணோட்டத்தை வழங்கினர்.